sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தமிழ் வளர்ச்சி துறை போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசு

/

தமிழ் வளர்ச்சி துறை போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசு

தமிழ் வளர்ச்சி துறை போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசு

தமிழ் வளர்ச்சி துறை போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசு


ADDED : ஜூலை 08, 2025 01:33 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு,:தமிழ் வளர்ச்சி துறை சார்பில், அம்பேத்கர் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கான பேச்சு போட்டி, ஈரோட்டில் கடந்த வாரம் நடந்தது.

அம்பேத்கர் பிறந்த நாள் பேச்சு போட்டியில், பள்ளி அளவில், கருங்கல்பாளையம் அல் அமீன் மேல்நிலைப்பள்ளி அ.சனாபாத்திமா, சத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ர.கார்த்திக், கருங்கல்பாளையம் நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி செ.காருண்யா முதல் மூன்று இடங்கள் வென்றனர். கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி த.அகல்யா, வலையாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி கி.மித்ரா சிறப்பு பரிசாக, தலா, 2,000 ரூபாய் வென்றனர்.

கல்லுாரி மாணவர் போட்டியில், டி.என்.பாளையம் ஜே.கே.கே.முனிராஜா மருந்தியல் கல்லுாரி மோ.கிருபானந்தம், ஈரோடு சிக்கய்ய அரசு கலை கல்லுாரி கு.சர்வேஸ்வரன், கோபி ஸ்ரீவெங்கடேஸ்வரா பாரா மெடிக்கல் கல்லுாரி த.இலக்கியா ஆகியோர் முதல் மூன்று பரிசை வென்றனர்.

கருணாநிதி பிறந்தநாள் போட்டியில் பள்ளி அளவில், கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வெ.பிரணிதா, பட்டிமணியக்காரன்பாளையம் பா.தர்ஷினி, வலையாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வி.நா.தமிழ்க்கனி முதல் மூன்று இடங்களை வென்றனர். மொடச்சூர் நகரவை மேல்நிலைப்பள்ளி சு.நிதிஷா, பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சு.நிரஞ்சன் நடராஜ் ஆகியோர் சிறப்பு பரிசாக, 2,000 ரூபாய் வென்றவர்.

கல்லுாரி அளவில் அரச்சலுார் கலை அறிவியல் மகளிர் கல்லுாரி க.நந்தினி, திண்டல் வேளாளர் மகளிர் கல்லுாரி த.ராஜேஸ்வரி, ரங்கம்பாளையம் ப.ஜோஷ்வா டேனியல் ஆகியோர் முதல், 3 பரிசை வென்றனர். இவர்களுக்கு நேற்று பரிசு வழங்கப்பட்டது. முதல், 3 இடங்களை வென்றவர்களுக்கு முறையே, 5,000, 3,000, 2,000 ரூபாய் என ரொக்கப்பரிசு, சான்றிதழை கலெக்டர் கந்தசாமி வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் இளங்கோ உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us