sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இரும்பு ஆலை கட்டுமான பணியை எதிர்த்து காத்திருப்பு போராட்டம்

/

இரும்பு ஆலை கட்டுமான பணியை எதிர்த்து காத்திருப்பு போராட்டம்

இரும்பு ஆலை கட்டுமான பணியை எதிர்த்து காத்திருப்பு போராட்டம்

இரும்பு ஆலை கட்டுமான பணியை எதிர்த்து காத்திருப்பு போராட்டம்

1


ADDED : ஜூலை 04, 2025 01:05 AM

Google News

ADDED : ஜூலை 04, 2025 01:05 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம் தாராபுரம் அருகே விவசாயத்தை பாதிக்கும் இரும்பு ஆலையை மூடக்கோரி, ஐந்து கிராமங்களை சேர்ந்த நுாற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாராபுரத்தை அடுத்த வடுகபாளையத்தில், கவுரி ஸ்டீல்ஸ் தனியார் இரும்பு ஆலை கட்டுமான பணி நடந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் இந்த ஆலையை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது, அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தனர்.

இந்நிலையில் மீண்டும் கட்டுமான பணி நடப்பதால் ஆத்திரமடைந்த, சங்கரண்டாம்பாளையம் உள்ளிட்ட ஐந்து கிராமங்களை சேர்ந்த, 400க்கும் மேற்பட்ட மக்கள், இச்சிபட்டியில் நேற்று காலை காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். தாராபுரம் ஆர்.டி.ஓ. பெலிக்ஸ் ராஜா மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். கட்டுமான பணிகளை நிறுத்தும்படி ஆலை நிர்வாகத்துக்கு உத்தரவிடுவதாக அதிகாரிகள் கூறினார். இதையடுத்து காலை, ௧௦:௦௦ மணிக்கு தொடங்கிய போராட்டம், மாலை, ௪:௦௦ மணிக்கு முடிவுக்கு வந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us