ADDED : செப் 16, 2026 06:39 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோட்டில் டி.ஆர்.இ.யு., (தட்சின் ரயில்வே எம்ளாயிஸ் யூனியன்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. போனஸ் கணக்கீடு உச்சவரம்பை மாற்ற வேண்டும். 14 ஆண்டுக்கும் மேலாக 78 நாட்கள் போனஸ் மட்டுமே ரயில்வே தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
78 நாட்கள் போனஸ் என்ற எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும் என வலியுறுத்தி, ஈரோடு ரயில் பெட்டி பராமரிப்பு அலுவலகம் முன்புறமும், ஈரோடு டீசல் லோகோ ஷெட் முன்புறமும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்ட துணை தலைவர் ரங்கநாயகி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.
