sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சொசைட்டி முன் சென்டர் மீடியன் அகற்றம் வாழை விவசாயிகள் சாலையை கடக்க அவதி

/

சொசைட்டி முன் சென்டர் மீடியன் அகற்றம் வாழை விவசாயிகள் சாலையை கடக்க அவதி

சொசைட்டி முன் சென்டர் மீடியன் அகற்றம் வாழை விவசாயிகள் சாலையை கடக்க அவதி

சொசைட்டி முன் சென்டர் மீடியன் அகற்றம் வாழை விவசாயிகள் சாலையை கடக்க அவதி


ADDED : அக் 28, 2025 01:29 AM

Google News

ADDED : அக் 28, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி, சென்டர் மீடியன் கற்களை அகற்றியதால், பிரதான மொடச்சூர் சாலையை கடந்து, கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்துக்கு, வாழைத்தார் மற்றும் தேங்காய் கொண்டு செல்லமுடியாமல் விவசாயிகள் அவதியுறுகின்றனர்.

எந்நேரமும் வாகன நடமாட்டம் அதிகமுள்ள, கோபி-மொடச்சூர் சாலையில், ஜியோன் தியேட்டர் எதிரே உள்ள கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாரந்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமை வாழைத்தாரும், வெள்ளிக்கிழமை தேங்காய் ஏலமும் நடக்கிறது. தவிர, விதை நெல் வாங்கவும், நகை கடன் வாங்கவும் அங்கு விவசாயிகள் அதிகளவில் வருகின்றனர்.

அதேபோல் அதே வளாகத்தில் உள்ள ரேஷன் கடையில், 900 கார்டுதாரர்கள் உள்ளதால், எந்நேரமும் அங்கு மக்கள் வந்து செல்கின்றனர். ஏலத்துக்கு விவசாயிகள் பெரும்பாலும், தங்களின் வாழைத்தார் மற்றும் தேங்காயை, டூவீலர் மற்றும் சரக்கு ஆட்டோவில் சங்கத்துக்கு கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோபி - மொடச்சூர் சாலையில் தார்சாலை சீரமைப்பு பணிக்காக, அதன் மத்தியில் இருந்த சென்டர் மீடியன் கற்களை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர்.

தற்போது அதற்கான பணிகள் முடிந்த நிலையில், மீண்டும் பிரதான மொடச்சூர் சாலையின் மத்தியில், சென்டர் மீடியன் கற்களை வைக்காததால், தாறுமாறாக பயணிக்கும் வாகனங்களுக்கு மத்தியில், விவசாயிகள் சாலையை கடந்து, தேங்காய் மற்றும் வாழைத்தாரை சங்கத்துக்கு கொண்டு செல்ல முடியாமல் அவதியுறுகின்றனர்.

எனவே அப்பகுதியில் பெரும் விபத்து நடக்கும் முன், அப்பகுதியில் சென்டர் மீடியன் கற்கள் வைக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us