/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அதிவேக லாரி மோதியதில் ஓய்வு மின்வாரிய ஊழியர் பலி
/
அதிவேக லாரி மோதியதில் ஓய்வு மின்வாரிய ஊழியர் பலி
ADDED : டிச 31, 2024 06:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: சென்னிமலை, ஈங்கூரை அடுத்த கவுண்டனுாரை சேர்ந்தவர் செங்கோட்டையன், 77; ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்.
வெட்டுக்காட்டுவலசு, இடை கருப்பராயன் கோவில் அருகில் பஜாஜ் டிஸ்கவர் பைக்கில் நேற்று மதியம் சென்றார். அப்போது அதிவேகமாக வந்த லாரி மோதியதில் நிலைதடுமாறி லாரி பின் சக்கரத்தில் விழுந்தார். இதில் தலை நசுங்கி பலியானர். லாரி டிரைவரான வெள்ளகோவில், பழனிசாமி நகரை சேர்ந்த சக்திவேலை, -54, சென்னிமலை போலீசார் கைது செய்தனர்.