/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஊரக, நகர்புற பணியாளர் தொடர் போராட்டம்
/
ஊரக, நகர்புற பணியாளர் தொடர் போராட்டம்
ADDED : ஜன 10, 2026 08:22 AM

ஈரோடு: தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர் நலச்சங்கம் சார்பில், நேற்று இரண்டாவது நாளாக, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்து, காத்தி-ருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். வட்டார இயக்க மேலாளர் சரஸ்வதி தலைமை வகித்தார். சமுதாய ஒருங்கிணைப்பாளர் கவுரி முன்னிலை வகித்தார். ஒப்பந்த அடிப்படையில் பணிபு-ரியும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
மாநில அளவில் மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகங்கள் மூலம் ஊதிய பிடித்தம், வட்டார இயக்க மேலாளர்களை வட்-டார ஒருங்கிணைப்பாளர்களாக தரம் குறைத்தல், பணியாளர்-களை பணியில் இருந்து விடுவித்தல், மனிதாபிமானமற்ற நடவ-டிக்கைகளை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை-களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பெருந்துறை சாலையில் ஊர்வலமாக சென்று குமலன்குட்-டையில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில், காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.

