/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சர்தார் வல்லபாய் பட்டேல் 150வது பிறந்த தின விழா
/
சர்தார் வல்லபாய் பட்டேல் 150வது பிறந்த தின விழா
ADDED : நவ 20, 2025 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை, நஇந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின், 150 வது பிறந்தநாளை மத்திய அரசு நாடு முழுதும், தேசிய ஒற்றுமை தின பேரணியாக நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையின் கீழ் இயங்கும், மேர யுவ பாரத் துறை சார்பாக, சென்னிமலை அடுத்துள்ள ஈங்கூரில் தனியார் கல்லுாரியுடன் இணைந்து ஒற்றுமை தின பேரணியை நடத்தின.
இதில் பாரம்பரிய கரகாட்டம், மாட்டு நடனம் மற்றும் சிலம்பு, மான்கொம்பு என தமிழக பாரம்பரிய கலைகளுடன், 300க்கும் மேற்பட்ட மாணவ,- மாணவியர் தேசியக் கொடி மற்றும் ஒற்றுமை குறித்த பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

