/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓய்வு அரசு பஸ் டிரைவருக்கு பள்ளி மாணவர் பிரியாவிடை
/
ஓய்வு அரசு பஸ் டிரைவருக்கு பள்ளி மாணவர் பிரியாவிடை
ஓய்வு அரசு பஸ் டிரைவருக்கு பள்ளி மாணவர் பிரியாவிடை
ஓய்வு அரசு பஸ் டிரைவருக்கு பள்ளி மாணவர் பிரியாவிடை
ADDED : மார் 31, 2025 02:53 AM
புன்செய்புளியம்பட்டி: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், சத்தி கிளையில் ஓட்டு-னராக சேதுபதி, 60, பணிபுரிந்தார். கடந்த, 36 ஆண்டுகளாக பணி-புரிந்தவர், இன்று பணி ஓய்வு பெறுகிறார். புளியம்பட்டி-பண்-ணாரி கோவிலுக்கு இயக்கப்படும் பி-1 டவுன் பஸ் ஓட்டுனராக தற்போது பணியில் உள்ளார்.
பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதி சித்தன் குட்டை பகு-திக்கு, காலை மற்றும் மாலையில் மாணவ, மாணவியருக்காக பஸ் செல்கிறது. பல ஆண்டுகளாக இந்த வழித்தடத்தில் சேதுபதி பணிபுரிந்தார். இந்நிலையில் அவருக்கு அப்ப-குதி மக்கள், பள்ளி மாணவ, மாணவியர், சித்தன்குட்டை பகு-தியில் தங்களது சொந்த செலவில் கேக் வெட்டி ஊட்டி விட்டு பிரியாவிடை கொடுத்தனர்.