/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வெளி மாநில கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக்க சிறப்பு முகாம்
/
வெளி மாநில கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக்க சிறப்பு முகாம்
வெளி மாநில கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக்க சிறப்பு முகாம்
வெளி மாநில கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக்க சிறப்பு முகாம்
ADDED : நவ 07, 2024 01:32 AM
வெளி மாநில கட்டுமான தொழிலாளர்கள்
நலவாரியத்தில் உறுப்பினராக்க சிறப்பு முகாம்
ஈரோடு, நவ. 7-
ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் முருகேசன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள, தொழிலாளர்களின் பணி நிலையை ஒழுங்குப்படுத்தவும், அவர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்க உடல் உழைப்பு தொழிலாளர்கள் சட்டம் இயற்றப்பட்டது. அவர்களுக்காக உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் உருவாக்கப்பட்டது.
இதில், வெளி மாநில கட்டுமான தொழிலாளர்களை தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில், www.tnuwwb.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பித்து உறுப்பினராக பதிவு செய்யலாம். வெளிமாநில தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினராக பதிவு செய்ய, ஈரோடு, சென்னிமலை சாலையில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில், ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை காலை, 10:00 முதல், 12:00 மணி வரை நடக்கிறது. இதற்கு கட்டணம் ஏதுமில்லை.
வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டு வெளி மாநில தொழிலாளர்கள், ஆண்டுக்கு ஒரு முறை பதிவை புதுப்பிக்க வேண்டும். திருமணம், மகப்பேறு, இரு குழந்தைகளுக்கு கல்வி நிதியுதவி, கண் கண்ணாடி, நியமனதாரருக்கு இயற்கை மரணம், விபத்து மரண உதவித்தொகை, பணியிடத்து விபத்து, மரண உதவித்தொகை தமிழக அரசால் வழங்கப்படும்.
ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் அளவு போட்டோ, வங்கி கணக்கு புத்தகம், வயதுக்கான ஆவணத்துடன், www.tnuwwb.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு ஒப்புதல் அளிக்கப்பட்டதும், நலவாரிய அட்டையை உறுப்பினர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நலத்திட்ட விபரங்களை, ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் நேரில் அல்லது, 0424 2275591 என்ற எண்ணிலும், அலுவலகத்தின் மின்னஞ்சலான, lossserode@gmail.com மூலம்
அறியலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.