/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தீண்டாமை ஒழிப்பு முன்னணி சிறப்பு பேரவை கூட்டம்
/
தீண்டாமை ஒழிப்பு முன்னணி சிறப்பு பேரவை கூட்டம்
ADDED : ஜூலை 09, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், சிறப்பு பேரவை கூட்டம், அந்தியூர் தவிட்டுப்பாளையத்தில் நேற்று நடந்தது. தலைவர் முருகன் தலைமை வகித்தார். அந்தியூர் வட்டாரத்தில் பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும். நகலுார் அருகே குண்டுமூப்பனுாரில் தெருவிளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும்.
அந்தியூர் வட்டாரத்தில் சவர தொழிலாளர் மற்றும் சலவை தொழிலாளர்களுக்கு வழங்கிய அரசு நிலத்தை பாரபட்சமின்றி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது