/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இன்றும், நாளையும் ஈரோட்டில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்
/
இன்றும், நாளையும் ஈரோட்டில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்
இன்றும், நாளையும் ஈரோட்டில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்
இன்றும், நாளையும் ஈரோட்டில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்
ADDED : ஜன 03, 2026 07:42 AM

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த, 19ல் வரைவு வாக்காளர் பட்டியல் பெறப்பட்டது. 19.97 லட்சம் வாக்காளர்களில், 16 லட்சத்து, 71,760 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் படிவம்-6 மற்றும் உறுதி மொழிப்படிவம், ஆவணங்கள் வழங்கி வருகின்றனர். கடந்த, 1 ல், 18 வயது நிறைவடைந்தவர்களும் புதிய வாக்காளர்களாக ஆவணங்களுடன் இணைந்து வருகின்றனர். இதற்கிடையில் கடந்த, 27, 28 ல் சிறப்பு முகாம் நடத்தப்பட்-டது.
இரண்டாம் கட்ட முகாம் இன்றும், நாளையும் நடக்க உள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள, 2,379 ஓட்டுச்சாவடி மையங்களில் இம்முகாம் நடக்கிறது. இம்முகாமில் உரிய ஆவணங்கள், உறுதி மொழி படிவத்துடன் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் தகவல் பெற, 1950, 90425 80535 உட்பட அந்தந்த தொகுதி அலுவலகங்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

