ADDED : ஜன 03, 2026 07:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ஈரோடு அக்ரஹாரம் அடுத்த சமயசங்கிலி பகுதியில் உள்ள விவ-சாய நிலங்களில், மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளது.
தற்போது கடும் பனி நிலவி வரவதால், மஞ்சள் பயிர்கள் கருகி வருகின்றன. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
சமயசங்கிலி பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் கரும்பு, நெல், மஞ்சள் என பல்வேறு விளைப்பொருட்கள் பயிரிடப்பட்டுள்ளன. இங்குள்ள விவசாய நிலங்களில்
ஆற்றுப்பாசனத்தை நம்பி மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது நிலவி வரும் பனி காரணமாக, 2 சதவீத பயிர் கருகி விட்டன. முன்னெச்சரிக்கை
நடவடிக்கை எடுத்தாலும்,
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் வரும் பனியால் மஞ்சள் பயிர் பாதிப்புக்குள்ளாகிறது.
இவ்வாறு கூறினர்.

