/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெருந்துறை ஒன்றியத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
/
பெருந்துறை ஒன்றியத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
ADDED : ஆக 14, 2025 02:40 AM
பெருந்துறை, பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கம்புளியம்பட்டி, பொன்முடி, குள்ளம்பாளையம் மற்றும் கராண்டிபாளையம் ஆகிய கிராம பஞ்சாயத்துகளில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் பெருந்துறை, சரளையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
முகாமை மாவட்ட கலெக்டர் கந்தசாமி துவக்கி வைத்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். முகாமில் மகளிர் உரிமைத் தொகை வேண்டி, 494 விண்ணப்பங்களும், பிற துறையில், 517 விண்ணப்பங்களும் பெறப்பட்டன. முகாமில், 23 பயனாளிகளின் கோரிக்கைகளுக்கு, உடனடி தீர்வு காணப்பட்டு, அதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. முகாமில், பெருந்துறை யூனியன் முன்னாள் சேர்மேன் சாமி, பெருந்துறை தாசில்தார் ஜெகநாதன், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் பாலகுமார், வட்ட வழங்கல் அலுவலர் பூபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேவகி, கிருஷ்ணசாமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.