sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அரசு பஸ்சில் மாணவர்கள் அடாவடி அந்தியூரில் போக்குவரத்து பாதிப்பு

/

அரசு பஸ்சில் மாணவர்கள் அடாவடி அந்தியூரில் போக்குவரத்து பாதிப்பு

அரசு பஸ்சில் மாணவர்கள் அடாவடி அந்தியூரில் போக்குவரத்து பாதிப்பு

அரசு பஸ்சில் மாணவர்கள் அடாவடி அந்தியூரில் போக்குவரத்து பாதிப்பு


ADDED : ஜூலை 16, 2025 01:24 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர், அந்தியூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து கோபிக்கு செல்லும், 20-சி அரசு டவுன் பஸ் நேற்று மாலை, 6:30 மணிக்கு புறப்பட்டது. பஸ்ஸில் ஏறிய அரசுப்பள்ளி மாணவர்கள், படியில் தொங்கியவாறு பயணம் செய்தனர். இதை கவனித்த டிரைவர் மற்றும் கண்டக்டர், உள்ளே வருமாறு அறிவுறுத்தினர். ஆனால், பேச்சை கேட்காமல் அபாய பயணத்தை தொடங்கினர்.

இதனால் அந்தியூர்-தவிட்டுப்பாளையம் இணைப்பு பாலத்தில், டிரைவர் பஸ்ஸை நிறுத்தி கண்டித்தார். அப்போதும் உள்ளே செல்ல முடியாது என்று மாணவர்கள் கூறவே, அந்தியூர் போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. அங்கு சென்ற போலீசார், மாணவர்களை உள்ளே செல்ல அறிவுறுத்தினர். அதன் பிறகே மாணவர்கள் உள்ளே சென்றனர். இதனால் அப்பகுதியில், ௨௦ நிமிடத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us