தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பெருந்துறை சந்திக்கும் 4வது இடைத்தேர்தல்

பெருந்துறை சந்திக்கும் 4வது இடைத்தேர்தல்

பெருந்துறை சந்திக்கும் 4வது இடைத்தேர்தல்


ADDED : ஜூன் 14, 2026 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2026 05:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை:பெருந்துறை சட்டமன்ற தொகுதி நான்காவது இடைத்தேர்தலை சந்திக்கிறது. சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் இரண்டாவது முறையாக களமிறங்கிய ஜெயக்குமார் வெற்றி பெற்றார்.

ஆனால் தொகுதி பக்கம் எட்டி பார்க்காமல், வெற்றி சான்றிதழுடன் சென்னைக்கு சென்றவர், தனது பதவியை ராஜினாமா செய்து, த.வெ.க.,வில் இணைந்து, அவர் சார்ந்த கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். இதனால் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பெருந்துறை தொகுதி சந்திக்கும், நான்காவது இடைத்தேர்தல் ஆகும்.முன்னதாக, 1967 தேர்தலில் சம்புத்த சோசலிட் பார்ட்டி கட்சி பாலசுப்பிரமணியம் வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.வானார். அவர் விபத்தில் இறந்ததால், 1969ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அவருடைய தம்பி சண்முகசுந்தரம் வெற்றி பெற்றார்.

அவரும் இறந்ததால், 1970ல் மீண்டும் இடைத்தேர்தல் நடந்தது. இதில் தி.மு.க., கூட்டணியில் களமிறங்கிய இ.கம்யூ., சென்னியப்பன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார். 1991 தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் வென்ற சுப்பிரமணியன் மரணம் அடைந்ததால், 1994ல் இடைத்தேர்தல் நடந்தது. இதில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட பெரியசாமி வெற்றி பெற்றார். இந்த நிலையில் ஜெயக்குமார் ராஜினாமாவை தொடர்ந்து, நான்காவது முறையாக இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us