ADDED : ஆக 28, 2024 07:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: அந்தியூர் அருகே வேம்பத்தி, நல்லாமூப்பனுாரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம், 40; வேம்பத்தி ரேசன் கடை சேல்ஸ்மேன். இவரின் தந்தை பழனிசாமி. இவர், புதுப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ரேஷன் கடை சேல்ஸ்மேன். இருவரும் கடந்த, 25ம் தேதி கர்நாடக மாநிலம் ஏழுதடா முனியப்பன் கோவிலுக்கு, பைக்கில் சென்றனர்.
தரிசனம் முடிந்து ஊருக்கு திரும்பினர். பர்கூர், ஊசிமலை அருகில் வந்தபோது, பைக் தடுமாறி விழுந்து இருவரும் பலத்த காயமடைந்தனர். மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பழனிசாமி நேற்று காலை இறந்தார். இதுகுறித்து பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

