sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

 டிரைவர், கண்டக்டர் ஓய்வறையில் ஒன்றுமில்லை: சட்டசபை மதிப்பீட்டுக்குழு தலைவர் கண்டனம்

/

 டிரைவர், கண்டக்டர் ஓய்வறையில் ஒன்றுமில்லை: சட்டசபை மதிப்பீட்டுக்குழு தலைவர் கண்டனம்

 டிரைவர், கண்டக்டர் ஓய்வறையில் ஒன்றுமில்லை: சட்டசபை மதிப்பீட்டுக்குழு தலைவர் கண்டனம்

 டிரைவர், கண்டக்டர் ஓய்வறையில் ஒன்றுமில்லை: சட்டசபை மதிப்பீட்டுக்குழு தலைவர் கண்டனம்


ADDED : டிச 12, 2025 07:49 AM

Google News

ADDED : டிச 12, 2025 07:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: சோலார் புது பஸ் ஸ்டாண்டில் டிரைவர், கண்டக்டருக்கான ஓய்வறையில் எந்த வசதியும் இல்லாததால், மாநகராட்சி கமிஷனரை, சட்டசபை மதிப்பீட்டுக்குழு தலைவர் கடிந்து கொண்டார்.

ஈரோட்டில் நடந்து முடிந்த பணிகள், வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்ய சட்டசபை மதிப்பீட்டுக்குழு வேடச்சந்துார் தி.மு.க., - எம்.எல்.ஏ., காந்திராஜன் தலைமையில் வந்தனர்.

திருவாடனை காங்., - எம்.எல்.ஏ., கருமாணிக்கம், தர்மபுரி பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன், முதன்மை செயலர் சீனிவாசன் பங்கேற்றனர்.

சோலார் புதிய பஸ் ஸ்டாண்டை பார்வையிட்டு பயணியர், டிரைவர், கண்டக்டர்களிடம் வசதிகள், தேவைகள் குறித்து கேட்டறிந்தனர். ப ஸ் ஸ்டாண்ட் முதல் மாடியில், அரசு போக்குவரத்து பணியாளர் ஓய்வறையை பார்க்க சென்றனர். ஆனால் அறை பூட்டி கிடந்தது. சாவி தொலைந்து விட்டது என கூறப்பட்டது.

பக்கத்தில் உள்ள மற்றொரு அறையை ஓட்டுநர், நடத்துநர் செஸ், கேரம்போர்டு விளையாட, புத்துணர்வுக்கான அறை என கூறி திறந்து காட்டினர். ஆனால், அந்த அறை குப்பையாக இருந்தது.

மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயினிடம், எம்.எல்.ஏ.,க்கள் குழு தலைவர் காந்திராஜன், ''இங்கு அரசு பஸ் நடத்துநர், ஓட்டுநர்களுக்கு தனி கழிப்பறை, குளியலறை, குடிநீர், பேன் வசதிகளை செய்யுங்கள்.

' 'அவர்களுக்கான ஓய்வறையில் கட்டில், தரமான மெத்தை, பேன் போடுங்கள்.

அவர்கள் ஓய்வெடுத்து பஸ்சை ஓட்டினால் தான் பயணியர் பாதுகாப்பாக இருக்க முடியும்,'' என, கூறினார்.

19க்கு 3 எம்.எல்.ஏ.,க்களே பங்கேற்பு

தலைவர் காந்திராஜன் தலைமையில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏ.,க்கள் செல்வப்பெருந்தகை, நந்தகுமார், அம்பேத்குமார் உட்பட, 19 பேர் இந்த குழுவில் உள்ளனர். 19 பேரும் வருவதாக அறிவித்து, இரண்டு முறை ஒத்திவைத்து, நேற்று வந்தனர். தலைவர் காந்திராஜன், காங்., கருமாணிக்கம், பா.ம.க., வெங்கடேஸ்வரன் மட்டுமே பங்கேற்றனர். 16 பேர் பங்கேற்கவில்லை.








      Dinamalar
      Follow us