sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மிரட்டல் விடுத்த வி.ஐ.பி., பக்தர்களால் சென்னிமலை கோவிலில் புது அறிவிப்பு

/

மிரட்டல் விடுத்த வி.ஐ.பி., பக்தர்களால் சென்னிமலை கோவிலில் புது அறிவிப்பு

மிரட்டல் விடுத்த வி.ஐ.பி., பக்தர்களால் சென்னிமலை கோவிலில் புது அறிவிப்பு

மிரட்டல் விடுத்த வி.ஐ.பி., பக்தர்களால் சென்னிமலை கோவிலில் புது அறிவிப்பு


ADDED : மார் 05, 2024 01:36 AM

Google News

ADDED : மார் 05, 2024 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை:சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு, ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இதில் சமீப காலமாக செவ்வாய்கிழமைகளில், அதிகாலை தொடங்கி இரவு வரை லட்சக்கணக்கானோர் வருகின்றனர். இதனால் செவ்வாய்கிழமைகளில், மலைப்பாதை டோல் கேட்டை மூடிய பிறகும், திறக்குமாறு அரசியல் வி.ஐ.பி., பக்தர்கள் பணியாளர்களை மிரட்டுவது அதிகரித்தது.

இதை தடுக்கவும் பக்தர்கள் அனைவருக்கும் டோல்கேட் திறந்திருக்கும் நேரத்தை தெரிந்து கொள்ளும் வகையில், திருக்கோவில் நிர்வாகம் சார்பாக நேரம் அறிவித்து, அறிவிப்பும் வைத்துள்ளனர்.

அதில் தினமும் காலை, 5:30 மணிக்கு டோல் கேட் திறக்கப்படும். இரவு, 7:45 மணிக்கு மூடப்படும். செவ்வாய்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் அதிகாலை, 4:30 மணிக்கு திறந்து, இரவு, 8:௦௦ மணிக்கு மூடப்படும்.

இந்த நேரத்துக்குப் பிறகு மலை கோவிலில் இருந்து கீழே வரும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us