தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குட்டி யானை டிரோன் மூலம் விரட்டியடிப்பு

குட்டி யானை டிரோன் மூலம் விரட்டியடிப்பு

குட்டி யானை டிரோன் மூலம் விரட்டியடிப்பு


ADDED : செப் 07, 2026 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 07, 2026 05:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அந்தியூர்:அந்தியூர் அருகே வட்டக்காடு வனப்பகுதியை ஒட்டிய குட்டைக்கு, 10 நாட்களாக குட்டி யானை தொடர்ந்து தனியாக வருவதாக, அந்தியூர் வனத்துறையினருக்கு விவசாயிகள் தகவல் தந்தனர்.

அந்தியூர் ரேஞ்சர் நந்தினி தலைமையில் பாரஸ்டர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் வனத்துறையினர், கண்காணிப்பில் ஈடுபட்டனர். காலை, 10:00 மணிக்கு குட்டி யானை ஆஜரானது.

சீமை கருவேல மரத்தை உலுக்கி காய்களை தின்றது. இதையடுத்து, 10:30 மணிக்கு அடர்ந்த வனப்பகுதிக்கு குட்டியை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். டிரோன் மூலம் காற்றின் சத்தத்தை ஒலிக்க விட்டு, வரட்டுப்பள்ளம் அணை வனப்பகுதிக்கு விரட்டி சென்றனர். மதியம், 3:00 மணிக்கு அங்குள்ள வனத்துக்குள் விரட்டப்பட்டது. தாயை பிரிந்து அல்லது தாய் இறந்ததால், அல்லது தாய் யானையே விரட்டியதால் தனியாக வந்திருக்கலாம். இதனால் வனத்துக்குள் விரட்டினாலும் குட்டி யானையை கண்காணிக்க வன ஊழியர்களுக்கு

அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us