/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கனமழையால் ஓடையில் வெள்ளப்பெருக்கு புளியம்பட்டி சாலையில் போக்குவரத்து 'கட்'
/
கனமழையால் ஓடையில் வெள்ளப்பெருக்கு புளியம்பட்டி சாலையில் போக்குவரத்து 'கட்'
கனமழையால் ஓடையில் வெள்ளப்பெருக்கு புளியம்பட்டி சாலையில் போக்குவரத்து 'கட்'
கனமழையால் ஓடையில் வெள்ளப்பெருக்கு புளியம்பட்டி சாலையில் போக்குவரத்து 'கட்'
ADDED : அக் 20, 2024 01:29 AM
கனமழையால் ஓடையில் வெள்ளப்பெருக்கு
புளியம்பட்டி சாலையில் போக்குவரத்து 'கட்'
நம்பியூர், அக். 20--
நம்பியூர் அருகே புளியம்பட்டி சாலையில், கொட்டக்காட்டுபாளையத்தில், உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் புளியம்பட்டி அருகே மங்கரசு வளையபாளையம், செம்மம்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் நேற்று கன மழை பெய்தது. 3 மணி நேரம் கொட்டிய மழையால் மழை நீர் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த வெள்ளமானது, கொட்டக்காட்டுபாளையத்தில் பாலம் கட்டும் பணி நடக்கும் ஓடை வழியாக வெளியேறியது. இதனால் கட்டுமான பணிகளுக்கான வைத்திருந்த பொருட்கள், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. அதேசமயம் நம்பியூர்-புளியம்பட்டி சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.