ADDED : ஆக 10, 2026 05:47 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:கடம்பூர்
மலையில், பரண் டிரைபல் சொசைட்டி மற்றும் பழங்குடி ஊராளி மக்கள் சங்கம்
இணைந்து, உலக பழங்குடியினர் தின விழாவினை நடத்தின. கடம்பூர் பஸ்
ஸ்டாண்ட் முன், பாரம்பரிய இசைகருவிகளை இசைத்து நடனமாடினர்.
அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு டான்போஸ்கோ மைதானத்தை அடைந்தனர்.
அங்கு நடந்த மாநாட்டில், பழங்குடி மக்களின் பிரச்னை குறித்து,
20க்கும் மேற்பட்ட தீர்மானம் நிறைவேற்றினர். சிறப்பு
விருந்தினர்களாக பழங்குடியினர் நலத்துறை ஆர்.ஐ., கங்காதரன்
கலந்து கொண்டு, பழங்குடியின மக்களுக்கான அரசு நலத்திட்டங்கள் பற்றி
பேசினார். இதில் ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டனர்.
