ADDED : மார் 31, 2025 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி: தெலுங்கு வருட பிறப்பு நாளில், யுகாதி பண்டிகை விமர்சை-யாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி புன்செய்புளியம்-பட்டி ஊத்துக்குளி அம்மன் கோவிலில் யுகாதி பண்டிகை விழா நேற்று காலை அபிஷேக பூஜையுடன் துவங்கியது.
தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்-பட்டன. முன்னதாக கோவில் வளாக பகுதியில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். ஊத்துக்-குளி அம்மன் உற்சவர் உட்பிரகார மண்டபத்தில் சப்பரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து கோவில் உலா நடைபெற்றது. யுகாதி பண்டிகை சிறப்பம்சமாக அபிஷேகத்தில் வேப்பம்பூ கலந்து பக்-தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.