/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சுகாதாரமின்றி தயாரிக்கப்பட்ட பானிபூரி பறிமுதல்
/
சுகாதாரமின்றி தயாரிக்கப்பட்ட பானிபூரி பறிமுதல்
ADDED : ஜூலை 05, 2024 01:07 AM
ஈரோடு: ஈரோட்டில் சுகாதாரமின்றி தயாரிக்கப்பட்ட பானிபூரி, மசாலா பொருட்களை, உணவு பாதுகாப்பு துறையினர் அழித்தனர்.
கர்நாடகா மாநிலத்தில் பானிபூரியில் கேன்சரை ஏற்படுத்தும் ரசா-யனம் கலந்த உணவினங்களை கலந்தது ஆய்வில் தெரியவந்தது. இதனால் தமிழகத்தில் பானிபூரி விற்பனை மற்றும் தயார் செய்யும் இடங்களில், உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டில் சத்தி சாலை அருகே, பழனிமலை வீதி, லாரி ஆபீஸ் பின்புறம் ஒரு வாடகை வீட்டில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த நான்கு குடும்பத்தினர் பானி பூரி, அதற்கான உருளை கிழங்கு மற்றும் சுண்டல் மசாலா தயார் செய்து வருகின்றனர். இங்கிருந்து பல்வேறு இடங்களில் விற்பனை செய்யும் வடமாநிலத்தவர்க-ளுக்கு வினியோகிக்கின்றனர். சோட்டு என்பவர் மொத்தமாக தயாரிக்கிறார். இங்கு ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நிய-மன அலுவலர் தங்கவிக்னேஷ், அலுவலர்கள் செல்வம், கேச-வராஜ் உள்ளிட்டோர் நேற்று சோதனை நடத்தினர். அங்கு சுகாதா-ரமற்ற முறையில், ஐந்து பிளாஸ்டிக்
மூட்டைகளில் பானிபூரி தயாரித்து வைத்திருந்தனர். தவிர தர-மற்ற, அழுகிய உருளை கிழங்கு மூட்டை, வடமாநிலங்களில் பயன்படுத்தப்படும் 'ராக் சால்ட்' கற்கள் மற்றும் பொடி, தரமற்ற மசாலா பொருள், சிவப்பு நிறமி, செயற்கையான சிட்ரிக் ஆசிட் வைத்திருந்தனர். அவற்றை பறிமுதல் செய்து, பினாயில் ஊற்றி அழித்தனர். பின் நியமன அலுவலர் தங்க விக்னேஷ் கூறியதா-வது: இன்னும் சில நாட்களுக்கு பானிபூரி தயாரித்து விற்கக்கூ-டாது என கூறியுள்ளோம். இவர்களுக்கு தரமாக பானிபூரி தயா-ரித்து விற்பனை செய்ய பயிற்சி தரவுள்ளோம். அதன்பின் ஒவ்-வொரு தயாரிப்பு இடங்கள், விற்பனை செய்யும் இடங்களுக்கும் உரிமம் வழங்கி, தயாரித்து விற்க அறிவுறுத்தியுள்ளோம். இங்கி-ருந்து உணவு மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்புகிறோம். அதன் விபரம் தெரிந்த பின், அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்-படும். இவ்வாறு கூறினார்.