/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு முருகன் கோவில்களில் வைகாசி விசாக வழிபாடு
/
ஈரோடு முருகன் கோவில்களில் வைகாசி விசாக வழிபாடு
ADDED : மே 23, 2024 06:54 AM
ஈரோடு : ஈரோடு திண்டலில், வேலாயுதசாமி கோவில் உள்ளது. இங்கு வைகாசி விசாக திருவிழாவையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.
நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, முருகனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. வள்ளி -தெய்வானை சமேதர் வேலாயுதசாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஈரோடு காசிபாளையத்தில் உள்ள, மலேசியா முருகன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
* சென்னிமலை, முருகன் கோவிலில் நேற்று மாலை முருகப் பெருமானின் அவதார தினமான வைகாசி விசாக விழா கோலாகலமாக நடந்தது. 68 வது ஆண்டு வைகாசி விசாக பெரு விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் ஊஞ்சலுார் காவிரியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது, நேற்று காலை சென்னிமலை, கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க, காவிரி திருமஞ்சன தீர்த்தம் ஊர்வலமாக புறப்பட்டு மலை கோவிலை சென்று அடைந்தது. மதியம், 3:00 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் விழா துவங்கி கலசஸ்தாபனம், 108 சங்கு ஸ்தாபனம், ஜெபம், ேஹாமம் நடந்தது. மாலை, 4:30 மணிக்கு முருகப்பெருமானுக்கு பஞ்சாமிர்தம், தேன், பழங்கள், பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகம் செய்து மாலை, 6:30 மணிக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடந்தது.ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சரவணன் தலைமையில், அருணகிரிநாதர் மடம் மற்றும் கிருத்திகை விசாக குழு அன்பர்கள் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர்.
* சத்தியமங்கலம், தவளகிரி தண்டாயுத பாணி கோவிலில் சிறப்பு யாகம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. நுாற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.* கோபி அருகே பச்சைமலை முருகன் கோவிலில், நேற்று காலை, 108 குடம் பால் ஊற்றி, மூலவருக்கு தாரா அபிேஷகம் நடந்தது. அதையடுத்து பால்குடம் அபிேஷகம், சத்ரு சம்ஹார மகா ேஹாமம், மகா அபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இதேபோல், பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில் சண்முகருக்கு சிறப்பு அபிேஷகம், மகன்யாச அபிேஷகம் நடந்தது. காலை, 10:00 மணிக்கு சண்முகருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

