sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறப்பு 2,100 கன அடியாக அதிகரிப்பு

/

கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறப்பு 2,100 கன அடியாக அதிகரிப்பு

கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறப்பு 2,100 கன அடியாக அதிகரிப்பு

கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறப்பு 2,100 கன அடியாக அதிகரிப்பு


ADDED : ஆக 10, 2025 01:20 AM

Google News

ADDED : ஆக 10, 2025 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி, பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறப்பு, 2,100 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை, 105 அடி உயரம், 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. அணை நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதிகளில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 3,274 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு, நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் முதல்கட்டமாக, 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முதல், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறப்பு, 2,100 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அதேபோல், அரக்கன்கோட்டை-தடப்பள்ளி மற்றும் காளிங்கராயன் பாசனத்திற்கு, 1,000 கன அடி, குடிநீர் தேவைக்கு 100 கன அடி நீர் என மொத்தம், 3,200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேற்று மாலை நிலவரப்படி, பவானிசாகர் அணை நீர்மட்டம், 101.93 அடியாகவும், நீர் இருப்பு, 30.2 டி.எம்.சி.,யாகவும் இருந்தது.






      Dinamalar
      Follow us