/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அத்திக்கடவு திட்டத்தில் குளங்கள் நிரம்பாதது ஏன்?
/
அத்திக்கடவு திட்டத்தில் குளங்கள் நிரம்பாதது ஏன்?
ADDED : டிச 27, 2025 07:50 AM
திருப்பூர்: அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் உபகரணங்கள் சேதமடை-வது; இரண்டாவது மின் இணைப்பு தாமதம் ஆகிய காரணங்-களால் குளங்களுக்கு நீர் செல்வது பாதிக்கப்படுகிறது.
அவிநாசி அடுத்த நடுவச்சேரியைச் சேர்ந்த விவசாயி பால்ராஜ், அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில், உள்ள சில குறைகளைச் சுட்-டிகாட்டி அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முதல்வரின் முகவரி துறைக்கு மனு அனுப்-பினார்.
அதற்கு நீர் வள துறை ெசயற்பொறியாளர் அப்புசாமி அனுப்-பிய பதில்: அத்திக்கடவு அவிநாசி திட்ட பகுதிகளில் அடை-யாளம் தெரியாத நபர்கள், குழாய் மற்றும் ஏர் வால்வுகள் உள்-ளிட்ட உபகரணங்களைச் சேதப்படுத்தி விடுகின்றனர். இதனால் நீர் செல்வதில் தாமதமாகிறது. இதுபோன்ற சேதங்கள் உடனுக்-குடன் சரி செய்யப்படுகிறது.
எம்மாம்பூண்டி நீரேற்று நிலையத்தில் இரண்டாவது மின் இணைப்பு மலையபாளையம் துணை மின் நிலையத்திலிருந்து பெற பணிகள் நடக்கிறது. இதில், 5 கி.மீ. பாதையில் 21 கோபு-ரங்களில் எட்டு அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கோபுரம் அமையவுள்ள இடங்களில் நில உரிமையாளர் எதிர்ப்பால் தாமத-மாகிறது. அன்னுார் அருகேயுள்ள நீரேற்று நிலையத்தில் பதுவம்-பள்ளி துணை மின் நிலையத்தில் முதன்மை இணைப்பு பெறப்-பட்டுள்ளது. இரண்டாவது இணைப்பு பசூர் மின் நிலையத்திலி-ருந்து பெறப்படவுள்ளது.
இந்த மின் நிலையப் பணிகள் முழு-மையடையாமல் உள்ளது. அதனால் இணைப்பு பெறுவது தாமத-மாகிறது. இதில் உள்ள ஆறு பம்ப்புகளும் கடந்த 2ம் தேதி முழு-மையாக இயக்கப்பட்டது. இனி அனைத்தும் முழுமையாக இயக்கி, நீரேற்றும் பணி மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

