ADDED : ஜூலை 27, 2025 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த வழக்குகள் தொடர்பாக, மாநில மகளிர் ஆணைய தலைவர் தலைமையிலான சிறப்பு குறைகேட்பு நிகழ்வு நடக்க உள்ளது.
வரும் ஆக.,4ம் தேதி காலை, 9:30 மணி முதல் திருப்பூர் மாவட்டம், 'ஆர்.கே.ரெசிடென்ஸி, 391- காந்தி நகர், திருப்பூர் ரோடு, அவிநாசி' முகவரியில் நடக்கிறது. இதில் மூன்று மாவட்டங்களில் நிலுவையில் உள்ள புகார் மற்றும் நேரில் பெறப்படும் புகார் குறித்து விசாரிக்கப்படுகிறது.