ADDED : ஜூலை 04, 2026 04:18 AM
அ நிறம் | அளவு
கோபி:கோபி அருகே சுண்டப்பாளையத்தை
சேர்ந்தவர் விஸ்வநாதன், 58, கூலி தொழிலாளி; அதே பகுதியில் வசிக்கும்
தனது மகளின் வீட்டில், நேற்று முன்தினம் மதியம் மின்
விசிறியை
மாட்ட முயன்றார்.
அப்போது நிலைதடுமாறி விழுந்ததில், தலையில் பலத்த
காயமடைந்தார். கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்
இறந்தார். அவரின் மகள் சபர்னா புகாரின்படி, கோபி போலீசார்
விசாரிக்கின்றனர்.
