ADDED : ஆக 07, 2026 05:31 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:நாமக்கல்
மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு முனியப்பன் கோவில் வீதியை
சேர்ந்தவர் ராஜகோபால், 38; டீக்கடையில் வேலை செய்கிறார்.
காலிங்கராயன் வாய்க்கால் கரையில் காவிரி சாலையோரம் சந்தேகத்துக்கு
இடமான வகையில் நின்றிருந்தார்.
ரோந்து சென்ற கருங்கல்பாளையம்
போலீசார் பிடித்து விசாரித்தனர். அவரிடம் அரசால் தடை செய்யப்பட்ட, 7
கிலோ குட்கா (ஹான்ஸ் 135 பாக்கெட், கூல் லீப் 48 பாக்கெட், விமல்
பான்மசாலா 1,410 பாக்கெட், வி-1 புகையிலை 1,410 பாக்கெட்) பொருட்கள்
இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
