ADDED : மே 17, 2024 10:51 PM

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 97- 98ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், முன்னாள் மாணவன் ஜெயபால் வரவேற்றார். ஆசிரியர்கள் பாலாம்மாள், திருஞானசம்பந்தம், ஜெயபால், இமானுவேல், கணபதி, குமரகுரு, ஆரோக்கிய மேரி, ஏழுமலை உள்ளிட்டோருக்கு முன்னாள் மாணவர்கள் சார்பாக நினைவுப் பரிசு வழங்கினர்.
நிகழ்ச்சியில் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர்.
ஆசிரியர்கள் பேசுகையில், 'எங்களிடம் படித்த மாணவர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் அரசு பணி, ராணுவம், காவல்துறை, பிசினஸ், தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்த நல்ல நிலையில் இருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது' என்றனர்.
தொடர்ந்து, முன்னாள் மாணவர்களின் குழந்தைகளின் நடன நிகழ்ச்சிகளும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.

