நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரியில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணித துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது.
இயற்பியல் துறை தலைவர் சந்திரசேகர் வரவேற்றார். கல்லுாரி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.
செயலாளர் சுப்ரமணியன், பொருளாளர் ஏழுமலை, தாளாளர் பழனி ராஜ், துணைத் தலைவர் முஸ்டாக் அகமது, முதல்வர் நாராயணசாமி, துணை முதல்வர் மீனாட்சி, நிர்வாக அலுவலர் குமார் வாழ்த்திப் பேசினர்.
கருத்தரங்கில், சிறப்பு விருந்தினர் தென்கொரியாவைச் சேர்ந்த நேஷனல் பல்கலைக்கழக பேராசிரியர் செந்தில் சிறப்புரையாற்றினார்.
வேதியல் துறை தலைவர் மணிகண்டன் நன்றி கூறினார்.