நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் காணாமல் போன சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த கரடிசித்துார் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் மகன் ஜீவா,16; பெற்றோர்கள் இல்லை. சில தினங்களுக்கு முன் திருச்சியில் ஜீவா தனியாக சுற்றி திரிந்துள்ளார்.
இதைப்பார்த்த தன்னார்வலர்கள் சிலர் விசாரணை செய்து, சிறுவனை கள்ளக்குறிச்சியில் உள்ள குழந்தைகள் நல குழும அலுவலகத்திற்கு கடந்த 21ம் தேதி அழைத்து வந்தனர்.
அங்கு சிறுவனின் பெற்றோர்கள், ஊர் குறித்து விசாரித்த பிறகு, விழுப்புரத்தில் உள்ள அரசு குழந்தைகள் இல்லத்தில் ஜீவாவை ஒப்படைக்க திட்டமிட்டனர். அப்போது, சிறுவன் ஜீவா அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து குழந்தை நலக்குழு தலைவர் சந்தோஷ்குமார் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

