/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
/
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
ADDED : ஜூலை 26, 2024 04:39 AM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழந்தார்.
திருக்கோவிலுார் அடுத்த சித்தலிங்கமடத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் மகன் ரகுகுமார், 35; பிளம்பர். நேற்று தனது நண்பரான விக்னேஷ், 27; உடன் சேர்ந்து திருக்கோவிலுார், அண்ணா நகரில், கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான பழைய வீட்டில் பிளம்பிங் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மனைவி காமாட்சி, 25; கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

