ADDED : அக் 03, 2025 11:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : காந்தி ஜெயந்தி நாளில் மதுபாட்டில் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில், கள்ளக்குறிச்சி ஜெயா கார்டன் மற்றும் ரங்கநதாபுரம் பகுதியில் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட் டனர்.
மதுபாட்டில் விற்பனை செய்த ஏமப்பேரை சேர்ந்த சங்கர், 50; ரங்கநாதபுரத்தில் மதுபாட்டில் விற்பனை செய்த கணங்கூரை சேர்ந்த மணிகண்டன், 35; ஆகிய இருவரையும் கைது செய்தனர்.