sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வளர்ச்சிப்பாதையை நோக்கி அரகண்டநல்லுார் பேரூராட்சி: சேர்மன் அன்பு பெருமிதம் சேர்மன் அன்பு பெருமிதம்

/

வளர்ச்சிப்பாதையை நோக்கி அரகண்டநல்லுார் பேரூராட்சி: சேர்மன் அன்பு பெருமிதம் சேர்மன் அன்பு பெருமிதம்

வளர்ச்சிப்பாதையை நோக்கி அரகண்டநல்லுார் பேரூராட்சி: சேர்மன் அன்பு பெருமிதம் சேர்மன் அன்பு பெருமிதம்

வளர்ச்சிப்பாதையை நோக்கி அரகண்டநல்லுார் பேரூராட்சி: சேர்மன் அன்பு பெருமிதம் சேர்மன் அன்பு பெருமிதம்


ADDED : அக் 01, 2025 12:48 AM

Google News

ADDED : அக் 01, 2025 12:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரகண்டநல்லுார் பேரூராட்சியில் குடிநீர், சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டு மாவட்டத்தின் முன்னணி பேரூராட்சியாக உருவெடுத்து வருகிறது என பேரூராட்சி சேர்மன் அன்பு கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது;

அரகண்டநல்லுார் பேரூராட்சி வளர்ந்து வரும் நகரமாகும். நகரின் அடித்தட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளை முழுமையாக நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மேற்பார்வையில், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குறி ப்பாக ரூ.7 கோடி மதிப்பில் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகள் நிறைவேற்றப்பட்டு அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 80 லட்சம் மதிப்பீல் சாலைகள், கழிவு நீர் கால்வாய், கல்வெட்டுகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.47 லட்சம் என மொத்தம் ரூ. 8.27 கோடி மதிப்பீட்டில் நகர மேம்பாட்டு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நகரில் இளைஞர்களிடம் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே திறந்த வெளி விளையாட்டு அரங்கம் அமைக்க பொன்முடிய எம்.எல்.ஏ., முயற்சியால் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 45 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் துவங்கப்பட உள்ளது.

சமூக நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அரகண்டநல்லுாரில் அனைத்து சமுதாய மக்களின் பேராதரவுடன் நகரின் வளர்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை, துணைத் தலைவர் கதிஜாபீவி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்களின் ஒத்துழைப்பால் வளர்ச்சி பணி திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம் என சேர்மன் அன்பு கூறினார்.






      Dinamalar
      Follow us