ADDED : அக் 27, 2024 11:26 PM

சங்கராபுரம்: சங்கராபுரம் ரோட்டரி சார்பில் போலியோ விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ரோட்டரி தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார்.
பேரூராட்சி தலைவர் ரோஜா ரமணி தாகப்பிள்ளை, வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார், ரோட்டரி முன்னாள் தலைவர்கள் முத்துக்கருப்பன், சுதாகரன், மூர்த்தி, ஆறுமுகம், சீனுவாசன் முன்னிலை வகித்தனர்.
கடைவீதி மும்முனை சந்திப்பில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் தொடங்கி வைத்தார்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலத்தினர் போலியோ ஒழிப்பு துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கிச் சென்றனர்.
தாசில்தார் சசிகலா போலியோ ஒழிப்பு நிதி வழங்கினார்.
ஊர்வலத்தில் இன்னர் வீல் கிளப் தலைவி சுபாஷினி, முன்னாள் தலைவி தீபா மற்றும் இன்னர் வீல் சங்கத்தினர், ரோட்டரி உறுப்பினர்கள் பங்கேற்றனர். செயலாளர் சங்கர் நன்றி கூறினார்.