ADDED : ஜூலை 10, 2025 08:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்; காணை வி.இ.டி., கல்வியியல் கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கல்லுாரி நிர்வாக இயக்குனர் கார்த்தியராஜ் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., ஜூலியான ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவர்கள் போதைப் பொருளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய விழிப்புணர் பதாகைகளை ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.
கல்லுாரி பேராசிரியர்கள், ஊழியர்கள், என்.எஸ்.எஸ்.,மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் பொன்னன் செய்திருந்தார்.