/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
டிராக்டரில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி
/
டிராக்டரில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி
ADDED : நவ 05, 2024 06:32 AM
உளுந்தூர்பேட்டை; உளுந்தூர்பேட்டை அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பரிதாபமாக இறந்தார்.
உளுந்தூர்பேட்டை அடுத்த புகைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் 40. விவசாயி. இவர் கடந்த 13ம் தேதி திருவேங்கடம் என்பவரின் நிலத்தில் டிராக்டரால் உழுது கொண்டிருந்தார். அப்போது 8ம் வகுப்பு படித்து வந்த ஜெயபால் மகன் சதீஷ்குமார், 13; என்பவர் டிராக்டரில் உட்கார்ந்து வந்தபோது தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.
தீவிர சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவன் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.