ADDED : பிப் 16, 2025 11:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம், பஸ் நிலையம் மற்றும் கடைவீதி மும்முனை சந்திப்பில், குற்றத்தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இன்ஸ்பெக்டர் சுமதி, சப் இன்ஸ்பெக்டர் அமானுல்லா, சைபர் கிரைம் சப் இன்ஸ்பெக்டர் அப்பாதுரை மற்றும் போலீசார் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குழந்தை திருமணம் உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.