/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முன்விரோத தகராறில் 7 பேர் மீது வழக்கு; இருவர் கைது
/
முன்விரோத தகராறில் 7 பேர் மீது வழக்கு; இருவர் கைது
முன்விரோத தகராறில் 7 பேர் மீது வழக்கு; இருவர் கைது
முன்விரோத தகராறில் 7 பேர் மீது வழக்கு; இருவர் கைது
ADDED : அக் 16, 2025 02:30 AM
திருவெண்ணெய்நல்லுார்: உளுந்துார்பேட்டை அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து இருவரை கைது செய்தனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த ஆசனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன், 47; கூலித்தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பழனி மகன் சுப்பையா, 32; என்பவருக்கும் குப்பை கொட்டுவது தொடர்பாக முன் விரோதம் உள்ளது.
இந்நிலையில் அன்பழகன் மனைவி முருவாயி நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு, அவரது வீட்டின் எதிரே உள்ள நிலத்தில் குப்பை கொட்டினார். அப்போது சுப்பையா, அவரது மனைவி சத்யா மற்றும் சுப்பையாவின் தாய் இந்திராணி ஆகிய மூவரும் சேர்ந்து முருவாயியை தாக்கினர்.
இதனை அன்பழகன் தட்டிகேட்டபோது, இரு குடும்பத்தினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கி கொண்டனர். இது குறித்து இரு தரப்பு அளித்த புகாரின் பேரில் எடைக்கல் போலீசார் சுப்பையா, சத்யா, இந்திராணி ,அன்பழகன், பெரியசாமி, ஆதிலட்சுமி, முருவாயி ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிந்து அன்பழகன், 47; மற்றும் சுப்பையாவை, 32; ஆகிய இருவரை கைது செய்தனர்.