/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தகராறில் காயமடைந்து சிகிச்சை பெற்றவர் பலி
/
தகராறில் காயமடைந்து சிகிச்சை பெற்றவர் பலி
ADDED : நவ 21, 2025 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தகராறில் காயமடைந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பிய முதியவர் இறந்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த நின்னையூர் சேர்ந்தவர் வீரப்பன்,88; இவர் கடந்த அக்., 14ம் தேதி ஊரில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அக்.,29ம் தேதி வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 6.30 மணியளவில் வீட்டில் வீரப்பன் திடீரென இறந்தார்.
வீரப்பன் மகன் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

