ADDED : டிச 11, 2025 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: மூதாட்டி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த ஈயனுார் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மனைவி அஞ்சலை,68; இவர் கடந்த 8ம் தேதி இரவு விருகாவூரிலிருந்து ஈயனுாருக்கு அரசு பஸ்சில் சென்றார்.
ஈயனுார் பஸ்நிறுத்தத்தில் இறங்கி வீட்டிற்கு நடந்து சென்ற போது, அஞ்சலை நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அஞ்சலைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
காயமடைந்த அவரை, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, மூதாட்டி வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

