sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மயான இடம் ஆக்கிரமிப்பு : மீட்டுத்தர வலியுறுத்தி மனு

/

மயான இடம் ஆக்கிரமிப்பு : மீட்டுத்தர வலியுறுத்தி மனு

மயான இடம் ஆக்கிரமிப்பு : மீட்டுத்தர வலியுறுத்தி மனு

மயான இடம் ஆக்கிரமிப்பு : மீட்டுத்தர வலியுறுத்தி மனு


ADDED : நவ 04, 2025 01:07 AM

Google News

ADDED : நவ 04, 2025 01:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: வடமாமாந்துாரில் ஆக்கிரமிப்பில் உள்ள மயான இடத்தை மீட்டுத்தர வலியுறுத்தி அம்பேத்கர் எழுச்சி இயக்க நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மனு விபரம்:

வடமாமாந்துாரில் 180 குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஊரில் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக 5 ஏக்கர் 30 சென்ட் பரப்பளவில் மயானம் உள்ளது. இதில் தற்போது 80 சென்ட் இடம் மட்டுமே மயானமாக உள்ளது.

மயானத்தை ஒட்டியவாறு நிலம் வைத்துள்ளவர்கள் மீதமுள்ள இடத்தை ஆக்கிரமித்துள்ளனர்.

மயானமாக உள்ள 80 சென்ட் இடத்தில் அரசு சார்பில் கட்டப்பட்ட கழிவறை கட்டடமும் உள்ளது.

இதனால், இறந்தவர்களை அடக்கம் செய்ய போதிய இடமின்றி, ஏற்கனவே அடக்கம் செய்த இடத்திலேயே மீண்டும் அடக்கம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. மயானத்தின் இடத்தை அளக்க வேண்டும் என ஏற்கனவே இரண்டு முறை மனு அளித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்யாமல் உள்ளனர். எனவே, மயானத்தை அளந்து, ஆக்கிரமிப்பில் உள்ள இடத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us