sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரசு பஸ் கண்டக்டர் காரில் சடலமாக மீட்பு

/

அரசு பஸ் கண்டக்டர் காரில் சடலமாக மீட்பு

அரசு பஸ் கண்டக்டர் காரில் சடலமாக மீட்பு

அரசு பஸ் கண்டக்டர் காரில் சடலமாக மீட்பு


ADDED : நவ 03, 2025 06:29 AM

Google News

ADDED : நவ 03, 2025 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே அரசு பஸ் கண்டக்டரின் உடல் காரில் இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.

திருக்கோவிலுார் அடுத்த மணம்பூண்டியைச் சேர்ந்தவர் பெரியநாயகசாமி மகன் ஜோசப் அந்தோணி ராஜ், 48; திருக்கோவிலுார் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் கண்டக்டராக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து அவருக்கு சொந்தமான காரை எடுத்துக் கொண்டு அத்திப்பாக்கம் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் மனைவி சம்யுக்தா, 43; மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிய நிலையில், அத்திப்பாக்கம் அருகே சாலையோரம் கார் ஒன்று நிற்பதாகவும், அதில் ஓட்டுநர் இருக்கையில் ஒருவர் அமர்ந்த நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்தது.

உறவினர்கள் மற்றும் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, காரில் ஜோசப் அந்தோணி ராஜ் இறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. மணலுார்பேட்டை போலீசார் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அவரது மனைவி சம்யுக்தா கொடுத்த புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us