sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கண் பரிசோதனை முகாம்

/

கண் பரிசோதனை முகாம்

கண் பரிசோதனை முகாம்

கண் பரிசோதனை முகாம்


ADDED : செப் 01, 2025 06:24 AM

Google News

ADDED : செப் 01, 2025 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் நடந்த இலவச கண் பரிசோதனை முகாமில் 850 பேர் பங்கேற்றனர்.

மேல்மருவத்துார் பங்காரு அடிகளார் 85வது பிறந்த நாளை முன்னிட்டு, திருக்கோவிலுார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் மற்றும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் திருக்கோவிலுார் சக்தி மன்ற வளாகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற நிர்வாகி பரத்குமார் தலைமை தாங்கினார். முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலை முன்னாள் பொது மேலாளர் திருநாவுக்கரசு முகாமை துவக்கி வைத்தார்.

அரவிந்த் கண் மருத்துவமனை சிறப்பு மருத்துவ குழுவினர் முகாமில் பங்கேற்ற 850 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர். இதில் 182 பேர் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

முகாமிற்கான ஏற்பாடுகளை விஜயலட்சுமி, ருக்மணி, ஸ்வேதா, செல்வம், சுதாகர் மற்றும் மன்ற பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us