/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு இலவச பயிற்சி
/
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு இலவச பயிற்சி
ADDED : நவ 25, 2025 05:04 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, 2ஏ முதன்மை மற்றும் முதல் நிலை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.
கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 2025ம் ஆண்டின் குரூப் 2 மற்றும் 2 ஏ முதல் நிலை தேர்வுக்கான ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது.
வரும் 27ம் தேதி காலை 10:00 மணி முதல் கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் புகைப்படம், ஆதார் அட்டை நகல், முதல்நிலைத் தேர்வின் நுழைவுச் சீட்டு நகல் மற்றும் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கு விண்ணப்பித்த நகல் ஆகிய விபர ங்களுடன் கள்ளக்குறிச்சி, நேப்பால் தெரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொ ழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் முன்பதிவு செய்ய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 04151 -295422, 245246 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

