ADDED : அக் 20, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை சார்பில் சங்கராபுரம் டி.எம்., பள்ளி வளாகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
ரோட்டரி சங்க தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் துணை ஆளுனர் ராஜேந்திரன், முன்னாள் தலைவர்கள் முத்துக்கருப்பன், மூர்த்தி, ரகுநந்தன், சங்கர், சுதாகரன், சீனிவாசன், உறுப்பினர் மகேந்திரன் முன்னிலை வகித்தனர்.
செயலாளர் மோகன் தாஸ் வரவேற்றார். ரோட்டரி டிரஸ்ட் சேர்மன் ஜனார்த்தனன் முகாமை துவக்கி வைத்தார். கோவை சங்கரா கண் மருத்துவ மைய டாக்டர்கள் குழு முகாமில் கலந்துகொண்டு, 296 பேர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர்.
இதில் 191 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக கோவை அழைத்து செல்லப்பட்டனர்.
பொருளாளர் முனுசாமி நன்றி கூறினார்.