sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

/

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி


ADDED : மே 13, 2025 11:52 PM

Google News

ADDED : மே 13, 2025 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி 4 இடங்களில் நடக்கிறது.

கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான 'கல்லுாரி கனவு' உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி இன்று 14 மற்றும் 16, 19 மற்றும் 21 தேதிகளில் நடக்கிறது. அதன்படி கல்லுாரி கனவு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி இன்று 14ம் தேதி தச்சூர் பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடத்தப்படுகிறது.

தொடர்ந்து 16ம் தேதி சங்கராபுரம் அடுத்த மயிலாம்பாறை செயின்ட் ஜோசப் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 19ம் தேதி திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரி, 21ம் தேதி உளுந்துார்பேட்டை சாரதா மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் கல்லுாரி கனவு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

இதில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள் பங்கேற்று உயர்கல்வி வழிகாட்டுதல் தொடர்பாக ஆலோசனைகளை வழங்க உள்ளது. எனவே, மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பங்கேற்று ஆலோசனைகளைப் பெற்று பயன்பெற வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us