/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புதுப்பட்டில் ஜெ.பேரவை திண்ணை பிரசாரம்
/
புதுப்பட்டில் ஜெ.பேரவை திண்ணை பிரசாரம்
ADDED : டிச 29, 2025 06:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: புதுப்பட்டு ஊராட்சியில் மாவட்ட அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில் திண்ணை பிரசாரம் நடந்தது.
சங்கராபுரம் அடுத்த புதுப்பட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கினார். ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் ஞானவேல் முன்னிலை வகித்தார். ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் திருமால் வரவேற்றார்.
அ.தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் இளந்தே வன், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் சன்னியாசி, மாவட்ட கலை பிரிவு செயலாளர் பவுல்ராஜ், பேரவை இணை செயலாளர் முனியன் ஆகியோர் கலந்துகொண்டு அ.தி.மு.க., அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

