/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கூத்தாண்டவர் கோவில் மகா கும்பாபிஷேகம்
/
கூத்தாண்டவர் கோவில் மகா கும்பாபிஷேகம்
ADDED : டிச 09, 2025 06:03 AM

ரிஷிவந்தியம்: உளுந்துார்பேட்டை அடுத்த கூவாகம் கூத்தாண்டவர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
அதனையொட்டி, கடந்த 6ம் தேதி மாலை 5:00 மணியளவில் ஸ்ரீ மகா கணபதி ஹோமம், அனுக்ஜை ஆசாரய் வர்ணம், மகாபூர்ணாஹூதி நடந்தது. நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு யாகசாலை பூஜை, ஹோமம், சாற்று முறை, மாலை 5:00 மணிக்கு மகா சாந்தி ஹோமம், யாகசாலை ஹோமம் நடந்தது.
நேற்று காலை 6:00 மணியளவில் விஸ்வரூபம். சுப்ரபாதம், ஹோமம் ஆரம்பம். 9:00 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் போது, தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிர்வாகத்திடம் வழங்கி னர்.

